சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 21ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது: படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் தனுஷ் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நிறைய இளம் நடிகர்கள், நடிகைகள் சினிமாவுக்கு வரவேண்டும்.
ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் தனுஷ் விளங்குகிறார். இந்த படத்தை பார்த்தபோது எனது 'குஷி' படத்தை பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. என்றார்.