ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'மார்க்கோ' படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இவர் தமிழில் சீடன், கருடன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த ஒரு பேட்டியில், "எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் பிடிக்கும். தமிழ் சினிமா பார்த்து வளர்ந்த பையன் நான். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக பிடிக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கமல், விக்ரமை சொல்லலாம். ஒரு படத்திற்காக முழுமையாக மாறி நிற்கும் இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் என் ஆதர்சம். விக்ரம் உடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.