ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் மாநாடு (பிக்கி) சென்னையில் வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் இந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மாநாட்டு குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஒரு முக்கிய மேடையாக இந்நிகழ்ச்சி அமையும். இத்துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தூண்டுகோலாக இது திகழும்.
இரண்டு நாள் மாநாட்டில் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த அமர்வுகள், கலந்துரையாடல்கள், பட்டறைகள், சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.