சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி , பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவரது இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
சமீபகாலமாக லிங்குசாமி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 700 கோடி பட்ஜெட், தற்போது எல்லா தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. இதனால் பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வர முடியும். மகாபாரதம் என்றால் நமக்கு பி.ஆர். சோப்ராவின் படைப்பு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி வேலை எனக்கு வந்துள்ளது. சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.