சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்தாண்டு நவம்பர் மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை சேர்ந்து வாழுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் தனக்கு அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவாக இருந்ததை தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய்ரா பானு. அவர் மட்டுமின்றி, ஆஸ்கர் விருது பெற்ற ஒளி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் தனது சட்ட ஆலோசகர் வந்தனா ஷா ஆகியோரும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சாய்ரா பானு.