ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணத்திரைக் காவியம் என்ற பெருமிதத்தோடு வெளிவந்த திரைப்படம்தான் “அடிமைப் பெண்”. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, இயக்குநர் கே சங்கர் அதிக பொருட் செலவில் இயக்கிய திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம். இதன் வெளிப்புறப் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் அரண்மனையை தேர்வு செய்திருந்தனர் படக்குழுவினர். ஜெய்ப்பூர் அரண்மனையில் அதுவரை யாரும் படம் பிடிக்க இயலாத இடங்களில் எல்லாம் “அடிமைப் பெண்” திரைப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு அன்றே பெரும் சாதனை புரிந்திருந்தனர். சாதாரணமாக அரண்மனை போல ஸ்டூடியோவிற்கு வெளியே பிரமாண்ட செட் ஒன்றை அமைத்துத்தான் படமாக்குவது வழக்கம். ஆனால் எம் ஜி ஆர் அதற்கும் ஒருபடி மேலேயே சென்று சாதித்திருந்தார் என்றால் அது மிகையன்று.
ஜெய்ப்பூர் அரண்மனைக்குள்ளேயே மற்றொரு அரண்மனை பகுதியை தன்னுடன் வந்த கலைஞர்களைக் கொண்டே கட்டவும் செய்திருந்தார் எம் ஜி ஆர். இத்திரைப்படத்திற்காக ஆயிரம் ஒட்டகங்களை வாடகை;கு அமர்த்தி, ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதமும், ஒட்டகம் ஓட்டி ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் என சம்பளம் கொடுக்கப்பட்டதோடு, மனித உணவு மற்றும் ஒட்டங்களின் உணவு என ஒவ்வொரு நாளும் இதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வாடகையாகவும், சவாரி செய்பவர்களுக்கென தனிச்சாப்பாடு என்று அனைத்து செலவினங்களையும் ஏற்றிருந்தது “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்”.
இன்றைய “பாகுபலி” திரைப்படத்தின் முன்னோடியாக பார்க்கப்படும் இத்திரைப்படம், 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. மற்ற ராஜா ராணி திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்திற்கென ஒரு தனிச்சிறப்பும் உண்டு. பேச்சுத் தமிழில் வெளிவந்த முதல் ராஜா ராணி திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்த திரைப்படமாகவும் அறியப்படுவதுதான் இந்த “அடிமைப் பெண்” திரைப்படம்.