சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி இருப்பவர், தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது புதிய படங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஜீனி' படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அதையடுத்து தற்போது 'பராசக்தி, கராத்தே பாபு' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறேன். இதில் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். இன்னொரு பக்கம் 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தோடு முடிந்துவிடும்'' என்கிறார் ரவி மோகன்.