ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த 2023ல் கிட்டத்தட்ட நான்கு மிகப்பெரிய படங்களில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் ஆச்சரியமாக கடந்த வருடம் ஸ்ருதிஹாசன் நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் இந்த வருடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி', விஜய்யின் 'ஜனநாயகன்', மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'ட்ரெயின்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இருந்தாலும் ரசிகர்களிடம் தனக்கு இடைவெளி விழுந்து விடக்கூடாது என சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடியும் தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை தெரிவித்தும் வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, தான் மிகப்பெரிய திரையுலக பிரபலங்களின் வாரிசு என்பதால் பொதுவெளியில் தன்னை பற்றி தெரிந்தால் அது சுதந்திரமாக வலம் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான் படங்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பு தனக்கென ஒரு பொய்யான பெயரை உருவாக்கி அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் வெளியே சுற்றினேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
அதாவது கமல்ஹாசனின் மகள் என்று அறிமுகப்படுத்தி யாரிடமாவது பேச ஆரம்பித்தால் அவர்களின் பேச்சு முழுவதும் தனது பெற்றோரின் பிரபலத்தை பற்றிய பேச்சாக மாறிவிடும் என்பதால் தன்னைப் பற்றி தெரியாத யாரிடமாவது பேச நேரும்போது இந்த பொய்யான பெயரை கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாராம் ஸ்ருதிஹாசன். அதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி தான் விரும்பியபடி உரையாட முடிந்தது என்றும் கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், ஆனால் ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க துவங்கிய பின்பு இந்த பொய்யான பெயர் எடுபடவில்லை என்றும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.