மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தால் பள்ளி குழந்தைகள் கெட்டு போகின்றனர் என ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மாணவர்களின் நடத்தை பற்றி தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள், மாநில கல்வி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு ஆசிரியை கூறும்போது, ‛‛அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை பார்த்த பின் பள்ளிக் குழந்தைகள் கெட்டு போய் உள்ளனர். மாணவர்களும் அந்த படத்தில் வருவதுபோன்று மோசமான ஹேர்ஸ்டைல் மற்றும் ஆபாசமாக பேசுகின்றனர்.
அரசு பள்ளி மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெற்றோர்களும் இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவது கிடையாது. இந்த படத்திற்கு எதன் அடிப்படையில் சென்சார் சான்று கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதையல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியையாக நான் தோற்றது போன்று உள்ளது''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.