சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அஜித் நடித்த 'வாலி', விஜய், ஜோதிகா நடித்த 'குஷி', படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.ஆர்யா. அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் மளமளவென உயர்ந்தார். தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் தான் ஈட்டிய வருமானத்திற்கு உரிய வரியான 7 கோடியே 57 லட்சம் செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே அதனை தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டது.