ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல ஹாலிவுட் நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க். 1996ம் ஆண்டு வெளியான 'ஹாரியட் தி ஸ்பை' என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் கெட்ஜெட், ஈரோ டிரிப், ஐஸ் பிரின்சஸ், பிளாக் கிறிஸ்துமஸ், காப் அவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். பபி தி வாம்பயர் ஸ்லேயர், காசிப் கேர்ஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்தும் புகழ் பெற்றார்.
39 வயதான மிச்செல் அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டன் பகுதியில் வசித்து வந்தார். கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (26ம் தேதி) மிச்செல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். மிச்செல் டிராட்சன்பெர்க் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேம்மேனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. ஜீன் ஹேக்மேன் சூப்பர் மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஆஸ்கர்விருதுக்கு 5 முறை இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, இதில் அன்பர்கிவன், தி பிரெஞ்சு கனெக்சன் ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற இவர் மெக்சிகோவில் தனது மனைவி அரகாவுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மனைவியுடன் இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.