ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கிரிப்டோ கரன்சி மோசடி என்பது நவீன உலகத்தில் தோன்றி உள்ள ஒரு புதுமையான மோசடியாகும். இப்படி ஒரு மோசடி புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ஒய்வுபெற்ற தொலைபேசி இலாகா அதிகாரி அசோகன் என்பவருக்கு நடந்தது. ஒரு நாள் இவரது செல்போன் எண்ணுக்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. அதை நம்பி பல்வேறு தவணைகளாக ஆன்லைன் மூலம் 98 லட்சத்தை அசோகன் முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு 9 கோடி லாபம் கிடைத்ததாக காண்பித்தது. இதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது முடியவில்லை. எனவே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அசோகனின் புகாரை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமை இடமாக கொண்டு 'கேஷ்பேக்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி கிரிப்டோ கரன்சி மோசடி செய்து வந்த கோவையை சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் ஒடிசா, டில்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.
இதற்கிடையே 'கேஷ்பேக் நிறுவன விழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றுள்னனர். மோசடி பணத்தில்தான் அவர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் எந்த வங்கி கணக்குகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது?. வாங்கிய சம்பளத்திற்கு வரி கட்டி உள்ளனரா? இது மோசடி நிறுவனம் என்பது அவர்களுக்கு முன்பே தெரியுமா? என்பது குறித்து அவர்களிடமே நேரடியாக விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.