கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது |
கடந்த 2020ல் கொரோனா முதல் அலை தீவிரமானபோது அந்த சமயத்தில் பல திரையுலக பிரபலங்களின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி ஒருவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். பாலிவுட்டையும் தாண்டி நேசிக்கப்படும் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர் மறைந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது ஊர் பெயரையே மாற்றி இர்பான் கானின் நினைவாக தங்கள் ஊருக்கு புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இகாத்புரி என்கிற நகருக்கு அருகில் உள்ள பட்ரியாச்சா வாடா என்கிற கிராமத்தினர் தற்போது தங்களது நகரத்திற்கு ஹிரோச்சி வாடி என்று பெயரை மாற்றி உள்ளனர். இதற்கு பக்கத்து வீட்டு ஹீரோ என்று அர்த்தம். அதாவது இர்பான் கான் தங்களில் ஒருவர் என சொலும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளனர்.
இர்பான் கான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த சமூக ஆர்வலராக இருந்தார். இந்த ஹிரோச்சி வாடி பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அங்கே ஒரு பண்ணை வீடு வாங்கி வசித்த இர்பான் கான் அவர்களில் ஒருவராகவே தன்னை மாற்றிக்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு இருக்கிறார். இதனாலேயே அவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது அந்த பகுதி மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.