ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் மலையாள தேசத்து நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்று மலையாள தேசத்து பாடகிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சின்னகுயில் சித்ரா, ஜென்ஸி போன்ற பல பாடகிகள் மலையாளத்தை விட தமிழிலேயே அதிகம் பாடி இருக்கிறார்கள். இந்த ஆதிக்கம் இப்போதல்ல 1940ளிலிருந்தே தொடங்குகிறது. இந்த காலத்தில் வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடி வருவதை போன்று அந்தக் காலத்தில் பாடியவர் வைக்கம் சரஸ்வதி.
கேரளாவில் மேடையில் கர்நாடக இசை பாடி வந்தவர் சரஸ்வதி. ஆல் இண்டியா ரேடியோவின் ஆஸ்தான பாடகியாகவும் இருந்தார். இவரது பாடல்கள் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தது. 1938ம் ஆண்டு வெளிவந்த 'நந்தகுமார் ' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'ஸ்ரீவள்ளி' படத்தில் பாடினார். 'தன அமராவதி' உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும் ஏனோ தமிழில் தொடர்ந்து பாடவில்லை. மலையாள பாடல்களிலும், கர்நாடக இசை கச்சேரிகளிலுமே அதிக ஆர்வம் செலுத்தினார். இவரது சகோதரர்தான் மலையாள சினிமாவின் முன்னணி பாடகரான ராஜன்.