ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி, மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராக கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக காசி நகரை செட் மூலம் ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. அதற்கடுத்து காசி செட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த செட்டின் புகைப்படத்தை யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இம்மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதையும் மீறி புகைப்படம் வெளியாகி உள்ளது.