தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. லூசிபர் முதல் பாகத்தில் நடைபெற்ற கதையின் தொடர்ச்சியாக அதில் இடம்பெற்று இருந்த பல முக்கிய கதாபாத்திரங்களும் இதிலும் தொடரும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் லூசிபர் படம் பார்த்த பலரும் அதன் கதை என்னவென்று தற்போது மறந்திருப்பார்களோ என்கிற எண்ணத்தில் எம்புரான் பார்க்க வருவதற்கு வசதியாக அதற்கு முன்பே லூசிபர் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். அந்த வகையில் எம்புரான் பட ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது மார்ச் 20ம் தேதி லூசிபர் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
எப்படியும் எம்புரான் படத்திற்காக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் செலவு செய்து படம் பார்க்க வருவார்கள் என்கிற நிலையில் இப்போது லூசிபர் படத்தையும் திரையிட்டால் அதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஒரு முறை கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். இது தேவையில்லாமல் அவர்கள் மீது சுமை ஏற்றுவது போலத்தான் என பல நடுநிலை ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.