சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'தொடரும்'. மோகன்லால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'எல் 2 எம்புரான' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 175 கோடி. அதிக பட்ஜெட் படம் என்றாலும் குறைவான லாபத்தையே அந்தப் படம் தந்தது.
அதே சமயம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'தொடரும்' படம் தற்போது உலக அளவில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அந்த சாதனையை '2018' படம் வைத்திருந்தது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' குறைந்த வித்தியாசத்தில் முறியடித்தாகச் சொன்னார்கள். இப்போது 'தொடரும்' படம் அதை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த முதல் நான்கு படங்களில் மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான், புலி முருகன்' ஆகிய மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.