தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நாக சைதன்யா நடித்து கடந்த மாதம் வெளியான 'தண்டேல்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அவரது முதல் 100 கோடி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா உடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த முதல் படமே 100 கோடி வசூலைத் தந்ததில் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனால், ஜாலியாக டூர் சென்றுள்ளனர். இருவரும் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். 'தண்டேல்' படத்திற்காக நாக சைதன்யா ஊர் ஊராகச் சுற்றி நிறைய புரமோஷன் செய்தார். அதனால் ஓய்வெடுக்கவே மனைவியுடன் டூர் சென்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தண்டேல்' பெற்ற வெற்றியால் அடுத்த படத்தையும் அது போலவே கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நாக சைதன்யா.