சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
நாக சைதன்யா நடித்து கடந்த மாதம் வெளியான 'தண்டேல்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அவரது முதல் 100 கோடி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா உடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த முதல் படமே 100 கோடி வசூலைத் தந்ததில் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனால், ஜாலியாக டூர் சென்றுள்ளனர். இருவரும் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். 'தண்டேல்' படத்திற்காக நாக சைதன்யா ஊர் ஊராகச் சுற்றி நிறைய புரமோஷன் செய்தார். அதனால் ஓய்வெடுக்கவே மனைவியுடன் டூர் சென்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தண்டேல்' பெற்ற வெற்றியால் அடுத்த படத்தையும் அது போலவே கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நாக சைதன்யா.