நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பொதுவாக நடிகை குமாரி சச்சு என்றால் அவர் காமெடி நடிகை, திருமணம் செய்து கொள்ளாதவர் என்றுதான் நினைவுக்கு வரும். நடிகர்களில் நம்பியார் எப்படியோ அப்படி நடிகைகளில் சச்சு. ஆன்மிக வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்தவர்.
அவர் வீடு முழுவதும் சாமி படங்கள் இருக்கும், வீட்டை சுற்றி வகைவகையான பூச்செடிகள் இருக்கும். இன்ன தேதியில் இந்த சாமிக்கு இந்த பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு அர்ச்சனை செய்கிறவர்.
அவரது சொந்த ஊரான புதுப்பாடி கிராமத்தில் அவரின் முன்னோர் கட்டிய வைத்திய நாதசுவாமி - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் இருக்கிறது. ஆனால் அந்த கோவில் பராமரிப்பின்றி கிடந்தது. சச்சுதான் பெரிய அளவில் நிதி திரட்டி தனது சொந்த பணத்தைபோட்டு அந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். அதே ஊரில் உள்ள பெருமாள் கோவிலையும் சீரமைத்தார்.
காஞ்சிபுரம் அருகில் திருப்புலிவனம் கோவில் உள்ளது. மயிலை கபாலி கோயிலை விடப் பெரியது. அந்த கோவில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்தினார். அதோடு அங்கு ஒரு விநாயகர் கோவிலையும் கட்டிக் கொடுத்தார்.
சச்சுவின் இந்த ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு காரணம் உள்ளது. 1960களில் சச்சுவும், அவரது சகோதரியும் மேடை நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ஆடக் கிளம்பும்போது சச்சுவுக்கு அம்மை போட்டிருந்தது. இதனால் சச்சுவின் அம்மா விழா ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தை சொன்னார். ஆனால் அவர்கள் நம்பாமல் கடுமையாக திட்டினார்கள். இதனால் கோபம் அடைந்த சச்சுவின் அம்மா மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு என் மகளை உன்னை நம்பி ஆட வைக்கிறேன். நீதான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார்.
சச்சுவிற்கு அம்மை போட்டிருப்பதை பார்த்து விழா ஏற்பாட்டாளர்கள் அவர் ஆட வேண்டாம் என்றார்கள். ஆனால் எல்லாத்தையும் அம்மன் பார்த்துக்குவாள் என்று கூறி ஆட வைத்தார். சச்சு ஆடி முடித்து மேடையில் இருந்து இறங்கி வந்ததும் அம்மை கொப்பளங்கள் காணாமல் போயிருந்தது. இந்த நிகழ்வே சச்சுவின் ஆன்மிக ஈடுபாட்டுக்கு காரணமாக அமைந்தது.