ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கராத்தே மாஸ்டரும், நடிகருமான சிஹான் உசேனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார். மிகவும் பாசிட்டிவான நபரான இவரை தமிழ்நாட்டில் பலருக்கும் பிடிக்கும். தற்காப்பு கலை பயில விரும்பும் மாணவர்களுக்கு பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். உசேனி தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நட்சத்திரங்களாகவும், இன்றைய அரசியல் ஆளுமைகளாகவும் வலம் வரும் பவன் கல்யாண் மற்றும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'மாணவர்களுக்காக நான் கட்டி வைத்திருக்கும் இந்த கலை மாளிகையை விற்று அந்த பணத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும்.
தெலுங்கு நடிகர் மற்றும் இன்றைய துணை முதல்வரான பவன் கல்யாண் என்னுடய மாணவர் தான். ஒன்றரை வருடம் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர் பெயர் கல்யாண் குமார். அவருக்கு பவன் என்று பெயர் வைத்ததே நான் தான். இன்று துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் என்னுடைய கலை மாளிகையை முடிந்தால் அவரே 11 கோடிக்கு வாங்கி கலைக்கோயிலாக மாற்ற வேண்டும்.
அதுபோல் நடிகர் விஜய்க்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கொரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்' என்று அந்த பேட்டியின் வாயிலாக தனது ஆசையை கூறியிருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த பிரபலத்தை தாண்டி, இன்று அரசியல் களமாடி வரும் இந்த இரண்டு டாப் ஸ்டார்களும், தங்களது முன்னாள் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.