ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேகா ஷெட்டி, மாளவிகா என இரு நாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், சரவணன், 'கஞ்சா' கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இரா. சரவணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எம்.குரு கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.