தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பொதுவாக மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. காரணம் தமிழ் மக்களுக்கு மலையாளம் எளிதில் புரியும் என்பதால். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது தமிழிலும் வெளியாகும். தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆபீசர் ஆன் டூட்டி' என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) வெளியாகிறது. இந்த படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ் கிரைம் திரில்லர் படமான இதில் குஞ்சாகோ போபன் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜித்து அஷ்ரப் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.