ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த நிறுவனம். மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க 'எல் 2 எம்புரான்' படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதிக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் பதிவிடவில்லை. மேலும், முன்னரே அறிவித்தபடி மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்குப் பதிலாக கோகுலம் சினிமாஸ் நிறுவனம் உள்ளே நுழைந்துள்ளது. நடிகர் மோகன்லால் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில் லைக்கா நிறுவனத்தை அவர் 'டேக்' செய்யவில்லை. பட வெளியீட்டு விவகாரத்தில் லைக்கா நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.