துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 18வது ஆண்டாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி நாளை ஆரம்பித்து மே மாதம் 25ம் தேதி வரை இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது.
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே தியேட்டர்களுக்கு சிக்கல் வந்துவிடும். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இதனால் தியேட்டர்கள் நிறையவே பாதிக்கப்படுகிறது.
இந்த வருடமும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் விளையாடும் மொத்த அணிகளிலும் மாற்றங்கள் நடந்துள்ளது. அதனால் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை முதல் தியேட்டர்களில் இரவுக் காட்சிகளுக்கான கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.
இந்த வாரம் குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் இல்லை. அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி 'வீர தீர சூரன் 2', ஏப்ரல் 10ம் தேதி 'குட் பேட் அக்லி, இட்லி கடை', மே 1ம் தேதி 'ரெட்ரோ' ஆகிய முக்கியமான படங்கள் வேண்டுமானால் ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்புள்ளது.
இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக பகல் நேரக் காட்சிகளுக்கும் பாதிப்புகள் வரலாம். ஏற்கெனவே சிங்கிள் தியேட்டர்கள் பலவற்றில் காட்சிகள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. இப்போது ஐபிஎல், வெயில் தாக்கம் வந்தால் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது.