தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வர்கள் சிலர் மட்டும்தான். சிலர் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள், சிலர் தியேட்டர்களைத் திறக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஏற்கெனவே ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏஎம்பி சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை சில வருடங்களுக்கு முன்பு திறந்தார்.
அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறக்க உள்ளார். மொத்தம் 7 தியேட்டர்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. தெலுங்கு ரசிகர்களிடம் உள்ள சினிமா மோகம் என்றுமே குறைந்ததில்லை. அவர்கள் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுவார்கள். அதனால், தியேட்டர்கள் திறப்பது நல்லதொரு வியாபார முதலீடுதான்.
மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.