ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குன் வேணு எல்டண்டி. 'பலகம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்து 'எல்லம்மா' என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை. எல்லம்மா என்பதே ஹீரோயின் பெயர்தான். இந்த படத்தில் நடிக்க வேணு, நடிகர் நானியை அணுகியபோது கதை நன்றாக இருக்கிறது. பவர்புல்லான ஹீரோயின் பட்ஜெட் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எல்லம்மா படத்தில் நடிக்க நானிக்கு பதில் நிதின் ஒப்பந்தம் செய்யப்பட்டடார். நாயகிக்கு ஒரே சாய்ஸ் சாய்பல்லவி தான் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது கதை கேட்டு வியந்த சாய்பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
தற்போது அவர் ராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதற்கு இடையில் எல்லம்மா என்கிற ஒரு கோபமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதா கேரக்டரின் அமைதி இருக்காது என்பதை உணர்ந்த சாய்பல்லவி எல்லம்மா படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சாய்பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் நடிக்க மறுத்துள்ள 3வது படம் இது. தற்போது எல்லம்மாவாக நடிக்க வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.