தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அரசியலில் தீவிரமாக பணியாற்ற வேண்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தொடர்ந்து நடிப்பேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் எனது அரசு வேலைகள், அரசியல் வேலைகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து 'ஓஜி' என்ற படத்தில் அவர் இன்னும் நடித்து முடிக்க வேண்டும். 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வேறு சில படங்கள் பேச்சு வார்த்தையுடன் நிற்கிறது.
அரசியல் கட்சி நடத்த பல கோடி பணம் தேவை. அதை சினிமா மூலம் சம்பாதித்து செலவிடும் எண்ணத்தில் பவன் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.