ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார் பிருத்விராஜ். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசையும் நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்திருந்த இரண்டு அதிரடி பாடல்களும் முக்கியமாக தூண்களாக அமைந்திருந்தன.
இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலரிலேயே தனது மிரட்டலான பின்னணி இசை மூலம் அதிக எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தார் தீபக் தேவ். இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிறிய பகுதியை பாடுவதற்கு ஒரு புதிய பெண் குரல் ஒன்றை தேடி வந்தார் தீபக் தேவ். அப்போது பிரித்விராஜின் மகள் அலங்க்ரிதாவின் குரலை கேட்டதும் அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் அந்த பாடலை பாட வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பிரித்விராஜன் மனைவி ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில் அவரது மகளும் சினிமாவில் இந்த பாடல் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல பிரித்விராஜின் சகோதரர் நடிகர் இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனாவும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.