படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிலும் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படமும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு என ஒரு நிலையான இடம் கிடைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறும்போது, “மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை” என்று கூறியுள்ளார்.