ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஏப்ரல் ஐந்தாம் தேதி இவரின் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப்பதிவில், இது என்னுடைய பிறந்தநாள் மாதம். அதனால் நான் ரொம்ப உற்சாகமாக உள்ளேன். வயது அதிகரிக்கும் போது பிறந்தநாள் கொண்டாடும் ஆர்வம் குறைந்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு எனக்கு 28 வயது முடிந்து 29 வயதாகி விட்டது என்பதை நம்பவே முடியவில்லை. கடந்த வருடத்தை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் கடந்து வந்துள்ளேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பிறந்த நாளை கொண்டாடாமல் விடுவேனா என்று அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அவரது பதிவுக்கு லைக் கொடுக்கும் ரசிகர்கள் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.