ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'எல்லாம் அவன் செயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆர்கே. அதன் பிறகு வைகை எக்ஸ்பிரஸ், என்வழி தனிவழி, புலி வேஷம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்போது புதிய ஸ்டூடியோ ஒன்றை கட்டியிருக்கும் அவர் அடுத்தபடம் பற்றி கூறியதாவது : விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை.
பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும். அதுதான் இந்த படத்தின் கதை. மனித மனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பற்றி இந்தப்படத்தில் பேசுகிறோம்.
யோகி பாபு, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கிறது.
வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கதை சொன்னேன்.. ஆனால் அவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவில் அப்போது இருந்தார். இறங்கி வந்தால் சத்தியமாக இருவரும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்தப் படத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது. இப்போது இந்த படத்தில் தம்பி ராமையா நடித்திருப்பது கூட வடிவேலுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான் என்றார்.