தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தெலுங்கு படங்களில் நடித்து வந்த
சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு
பாகங்களிலும் வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த
ஆகஸ்டு மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா,
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த
வகையில், தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் அவர் நடிக்கப்
போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த
படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அசோக் செல்வன், பஹத்
பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, சோபிதா துலிபாலா நாயகியாக
நடிக்கப் போகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.