கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மலையாள திரை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் எம்ஜி ஸ்ரீகுமார். மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் காதலர் தினம், என் சுவாச காற்றே, தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்திற்கு இசையமைத்தது கூட இவர்தான். இந்த நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்றில் இவர் வீட்டில் இருந்து குப்பை கொட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகம் இவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராத தொகையையும் ஸ்ரீகுமார் கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அந்த ஆற்றில் படகு பயணம் செய்த போது ஏதேச்சையாக எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தான் இப்படி ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து ஆற்றில் குப்பை கொட்டப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படவே இந்த வீடியோவை வைத்து விசாரித்து அது எம்ஜி ஸ்ரீகுமாரின் வீடு தான் என்பதை கண்டுபிடித்து அதன் பிறகு அபராதம் விதித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.