ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் எம்ஜி ஸ்ரீகுமார். மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் காதலர் தினம், என் சுவாச காற்றே, தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்திற்கு இசையமைத்தது கூட இவர்தான். இந்த நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்றில் இவர் வீட்டில் இருந்து குப்பை கொட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகம் இவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராத தொகையையும் ஸ்ரீகுமார் கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அந்த ஆற்றில் படகு பயணம் செய்த போது ஏதேச்சையாக எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தான் இப்படி ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து ஆற்றில் குப்பை கொட்டப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படவே இந்த வீடியோவை வைத்து விசாரித்து அது எம்ஜி ஸ்ரீகுமாரின் வீடு தான் என்பதை கண்டுபிடித்து அதன் பிறகு அபராதம் விதித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.