ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காப்பி ரைட் சட்டம் வராத காலத்தில் யார் வேண்டுமானாலும், யார் கதையை வேண்டுமானாலும் படமாக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் படமாக்கலாம் என்கிற நிலை இருந்தது. இதனால் பல கதைகள், நாடகங்கள் பலரால் பல காலகட்டங்களில் படமாக்கப்பட்டது. ஆனால் ஒரே ஆண்டுக்குள் ஒரு கதையை மூன்று தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று அந்த கதை 'பில்ஹானா'.
இது ஒரு புகழ்பெற்ற காஷ்மீரி கதை. காஷ்மீர் மன்னன் தன் மகளுக்கு கல்வி கற்பிக்க ஒரு கவிஞனை நியமிக்கிறான். அந்த கவிஞர் அழகாக இருப்பதால் தன் மகள் காதலித்து விடுவாளோ என்று பயந்த மன்னன் ஒரு தந்திரம் செய்தான். கவிஞன் பார்வையற்றவன் என்று மகளிடம் சொன்னான். தன் மகள் தீயில் முகம் கருகிய அழகற்றவள் என்று அந்த கவிஞரிடம் சொன்னார். இருவருக்கும் இடையில் திரையிடப்பட்டது.
கவிஞன் இளவரசிக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தான். முழு பவுர்ணமி அன்று ஒரு நாள் கவிஞன் நிலவை புகழ்ந்து பாட இளவரசிக்கு சந்தேகம் வந்தது. கண்பார்வையில்லாத ஒருவனால் எப்படி நிலவை இப்படி வர்ணிக்க முடியும் என்று கருதி திரையை விலக்கி பார்த்தாள். கவிஞன் பேரழகான இருந்தான். கவிஞனும் இளவரசியை பார்த்தான் பேரழியாக இருந்தாள்.
இருவரும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த மன்னன் இவருக்கும் மரண தண்டனை விதிக்கிறான். காதலுக்கு ஆதரவாக மக்கள் நாடு முழுவதும் கிளர்ச்சி செய்கிறார்கள். வேறு வழியில்லாத மன்னன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறான்.
இப்படி ஒரு கதையை யாருக்குத்தான் சினிமாவாக எடுக்கத் தோன்றாது. 1948ம் ஆண்டு இந்த கதையை 'பில்ஹணன்' என்ற பெயரில் டிகேஎஸ் சகோதரர்கள் திரைப்படமாக தயாரித்தார்கள், கே.வி.ஸ்ரீனிவாசன் இயக்கினார், டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, திரவுபதி நடித்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.
பின்னர் இதே கதையை 'பில்ஹணு' என்ற பெயரில் முபாரக் பிக்சர்ஸ் தயாரித்தது. பி.என்.ராவ் இயக்கினார், கே.ஆர்.ராமசாமி, ஏ.ஆர்.சகுந்தலா நடித்தனர். முதல் படம் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படம் நவம்பர் மாதம் வெளியானது. ஏற்கெனவே வெளியான படம் பெரிய வெற்றி பெற்று விட்டதால் பில்ஹனாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இதே பில்ஹனா கதையை தியாகராஜ பாகவதர் நடிப்பில் படமாக்கப்போவதாக மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். ஆனால் தியாகராஜ பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்றதால் அந்த படம் கைவிடப்பட்டது.