வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ரஜினி நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' படம் பற்றி அனைவரும் அறிவர். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பு 'அன்புள்ள எம்ஜிஆர்'.
அந்த காலத்திய சினிமா கதாசிரியரும், தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணியும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து டில்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 'டச் ஆப் லவ்' என்ற படத்தை பார்த்தார்கள். எல்விஸ் பிரஸ்லி என்ற பிரபல பாப் பாடகரின் தீவிர ரசிகையாக ஒரு உடல் ஊனமுற்ற சிறுமி இருப்பார். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்ள மாட்டார்கள். ஆனால் கடிதத்திலும், டெலிபோனிலும் பேசிக் கொள்வார்கள். இந்த சிறுமி இறப்பதற்கு முன்பாக எல்லிஸ் பிரஸ்லியை சந்திக்க விரும்புவாள். இருவரும் சந்திப்பார்கள். இப்படி நெகிழ்ச்சியான படம் இது.
இந்த படத்தை பார்த்த பிறகு இதே கதையை தமிழில் படமாக்க விரும்பிய இருவரும் அதற்கு எம்ஜிஆர் தான் சரியானவர் என்று முடிவு செய்து அவரை சந்தித்து கதை சொன்னார்கள். கதையை கேட்ட எம்ஜிஆர் பல காட்சிகளில் கண் கலங்கினார். அப்போது முதல்வராக இருந்தபோதும் சில காட்சிகளில்தானே நடிக்க வேண்டும் என்று நடிக்க ஒப்புக் கொண்டதோடு இது தொடர்பாக அமைச்சர் அரங்கநாயகத்திடம் பேசுங்கள் என்று கூறிவிட்டார்.
கதையை கேட்ட அரங்கநாயகம் படத்தை நானே தயாரிப்பதாக இருந்தால் எம்ஜிஆரை நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த நண்பர்கள் இருவரும் இதே கதையை ரஜினியிடம் சொன்னார்கள். ரஜினி உடனே ஒப்புக்கொண்டார். படத்தின் தலைப்பும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' என்று மாற்றப்பட்டது. இந்த படத்தில் சம்பளம் எதுவும் பெறாமல் 10 நாட்கள் நடித்துக் கொடுத்தார் ரஜினி. படமும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மீனா, ரஜினியை நேசிக்கும் சிறுமியாக நடித்திருந்தார். ரஜினி நண்பர் நட்ராஜ் இயக்கியிருந்தார்.