ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.