ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவை, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் அதே டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் நிலையில், அவரது மருமகளாக முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனன் மீண்டும் நடித்து வருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஜெயிலர்-2 படப்பிடிப்பில் கடந்த பத்தாம் தேதி தான் கலந்து கொண்டதாகவும், அதே நாள்தான் ரஜினியுடன் தான் இணைந்து நடித்த படையப்பா படத்தின் 26வது ஆண்டு நாள் என்றும் தெரிவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், படையப்பா 26வது ஆண்டு நாளில் மீண்டும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனனை தொடர்ந்து யோகி பாபுவும் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த அதே வேடத்தில் நடிக்கும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார்.