ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படங்களில் நடிக்கவும் தொடங்கி உள்ளார். விரைவில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க போகிறார். சென்னையில் நடந்த தனது ‛45' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் கமலின் தீவிர ரசிகன் என பேசி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், ‛‛நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என எல்லோருக்கும் தெரியும். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் கமலிடம் இருந்து போன் வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்தசமயம் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.
ஹீரோ என்றால் கமல் மாதிரி இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் பெண்ணாக பிறந்து இருந்தால் நிச்சயம் அவரை திருமணம் செய்து இருப்பேன். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். என் மகன் என்றார் அப்பா. அப்போது நான் ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கமலிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்'' என்றார்.