தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படங்களில் நடிக்கவும் தொடங்கி உள்ளார். விரைவில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க போகிறார். சென்னையில் நடந்த தனது ‛45' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் கமலின் தீவிர ரசிகன் என பேசி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், ‛‛நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என எல்லோருக்கும் தெரியும். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் கமலிடம் இருந்து போன் வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்தசமயம் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.
ஹீரோ என்றால் கமல் மாதிரி இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் பெண்ணாக பிறந்து இருந்தால் நிச்சயம் அவரை திருமணம் செய்து இருப்பேன். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். என் மகன் என்றார் அப்பா. அப்போது நான் ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கமலிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்'' என்றார்.