ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர் ரூபஸ் பார்கர். அமெரிக்காவில் குடியேறி அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கிறார். சிறுவயது முதல் சினிமா மீதான தனியாத பற்றின் காரணமாக 2014ல் அமெரிக்காவில் பி2 பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி ஹாலிவுட் படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக அவர் தயாரித்த படம் 'சிட்டி ஆப் ட்ரீம்ஸ்'.
இந்த படம் அமெரிக்காவில் புலம் பெயர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு நடக்கும் மிகப்பெரும் அநீதியை பட்டவர்த்தனமாக வெளிஉலகிற்கு தோலுரித்து காட்டி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 12 மில்லியன் புலம் பெயர் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டத்திற்கு புறம்பாக உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்படுவதை உண்மைக்கு வெகு நெருக்கமாக சொன்ன படம்.
'லயன்ஸ் கேட்' என்னும் ஹாலிவுட் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் ஆஸ்கர் அகாடமி லைப்ரரியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.