தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பெண் இயக்குனர்கள் குறைவாக உள்ள தமிழ் சினிமாவில் மற்றுமொரு இயக்குனராக களம் இறங்கி உள்ளார் ஜெயலட்சுமி. தனது ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்ட் நிறுவனத்திற்காக அவரே தயாரித்து இயக்கும் படம் 'என் காதலே'.
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார். அறிமுக நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஜெயலட்சுமி கூறியதாவது: மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வரும் நாயகி லியாவிற்கு மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு இங்கு பல தடைகள் இருப்பதால் அவரது காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார். இறுதியில் லியாவின் ஆராய்ச்சி என்ன ஆனது அவர்கள் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.
படப்பிடிப்பு கேரளா, காரைக்கால் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி போன்ற ஊர்களில் கடலும் கடல் சார்ந்த இடங்களில் நடைபெற்றுள்ளது. கோடை கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. என்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.