ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இப்போதெல்லாம் நாலு படத்தில் ஒரு படம் திகில் படமாகத்தான் வெளியாகிறது. படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம். மினிமம் கியாரண்டியும் இருக்கும். ஆனால் காதல் கதைகளும், ஆக்ஷன் கதைகளும் வந்து கொண்டிருந்த 80களில் வெளிவந்து அதிர வைத்த திகில் படம் 'நாளை உனது நாள்'.
ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த், நளினி, சத்யராஜ், செந்தாமரை, சிவச்சந்திரன், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், கணேச பாண்டியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஒரு வணிக நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் 7 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களை விமானத்தில் சுற்றுலா அனுப்பி வைக்கிறது. வானத்தில் பறக்கும்போது அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் இறங்குகிறது. அங்கு ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. அதில் அனைவரும் தஞ்சமடைகிறார்கள். அங்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் கொல்லப்படுகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதுதான் கதை. இது எல்லாமே அந்த நிறுவனத்தின் ஏற்பாடுதான். அவர்கள் ஏன் அந்த ஏழுபேரை தேர்வு செய்தார்கள். ஏன் கொல்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
ஆஹா அந்த காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறார்களே என்று அவசரப்பட வேண்டாம். இது பிரபல ஆங்கில எழுத்தாளர் அகதா கிறிஸ்டியன் எழுதிய 'அன்டு தன் தேர் வேர் நன்' என்ற நாவலின் கதை. இந்த கதை இந்தியில் 'கும்னாம்' என்ற பெயரில் திரைப்படமானது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்தான் 'நாளை உனது நாள்'.