ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தனது முதல் படத்திலேயே அழுத்தமான தடத்தைப் பதிவு செய்தவர் சசிகுமார். இயக்குனர், நடிகராக அவர் அறிமுகமான அந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின் 'ஈசன்' படத்தை மட்டும் அவர் இயக்கினார். அந்தப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை. நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
கமர்ஷியல் படங்களிலும், மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படம் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் தவிர இன்னும் நான்கைந்து படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் உள்ளாராம். சரித்திர கால படம் ஒன்றிற்கான கதை, திரைக்கதை பணிகளை முடித்துள்ள சசிகுமார், அதில் முன்னணி நடிகர்கள் நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
விரைவில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்கிறார்கள்.