ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒரு திரைப்படம் உருவாவதற்கு கதை, திரைக்கதை தாண்டி, தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அத்தனை நபர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களுக்கு சம்பளம், உருவாக்கத்திற்கான செலவு அனைத்தும் பட்ஜெட்டாக கணக்கிடுவர். தற்போதைய சூழலில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு கூட ஓரிரு கோடி செலவாகிறது. அப்படியிருக்கையில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆச்சரியமாக பார்க்கப்படும் 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முழு திரைப்படத்தையும் எடுத்துள்ளது வியக்க வைத்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர், கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து முழு ஏஐ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை உருவாக்க மொத்தமே ரூ.10 லட்சம் தான் செலவானதாம். அதுவும் ஏஐ மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது. மொத்தம் 12 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. முழு படத்தையும் ஆறே மாதங்களில் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவின் முதல் ஏஐ திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. உலகளவில் 2024ம் ஆண்டு 'வேர் தி ரோபோட்ஸ் க்ரோ' என்ற ஏஐ திரைப்படம் முதலாவதாக வெளியானது. குறைந்த முதலீட்டில் முழு திரைப்படத்தையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல ஏஐ திரைப்படங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.