தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு திரைப்படம் உருவாவதற்கு கதை, திரைக்கதை தாண்டி, தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அத்தனை நபர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களுக்கு சம்பளம், உருவாக்கத்திற்கான செலவு அனைத்தும் பட்ஜெட்டாக கணக்கிடுவர். தற்போதைய சூழலில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு கூட ஓரிரு கோடி செலவாகிறது. அப்படியிருக்கையில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆச்சரியமாக பார்க்கப்படும் 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முழு திரைப்படத்தையும் எடுத்துள்ளது வியக்க வைத்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர், கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து முழு ஏஐ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை உருவாக்க மொத்தமே ரூ.10 லட்சம் தான் செலவானதாம். அதுவும் ஏஐ மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது. மொத்தம் 12 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. முழு படத்தையும் ஆறே மாதங்களில் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவின் முதல் ஏஐ திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. உலகளவில் 2024ம் ஆண்டு 'வேர் தி ரோபோட்ஸ் க்ரோ' என்ற ஏஐ திரைப்படம் முதலாவதாக வெளியானது. குறைந்த முதலீட்டில் முழு திரைப்படத்தையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல ஏஐ திரைப்படங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.