தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1944ம் ஆண்டு நடித்த 'ஹரிதாஸ்' படம்தான் பாகவதர் சிறைக்கு செல்லும் முன் நடித்த கடைசி படம். அதன்பிறகு பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, 30 மாத சிறை தண்டனை என கழிந்தது பாகவதர் வாழ்க்கை.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்க விரும்பினார் பாகவதர். சிறையில் இருந்து வந்ததும் நண்பர்களை சந்திக்கவில்லை. கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் புனேவில் உள்ள பிரபாத் ஸ்டூடியோவுக்கு சென்ற பாகவதர் அங்கு தங்கி இருந்து 'ராஜமுக்தி' படத்தின் பணிகளை தொடங்கினார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த அவருக்கு பலரும் உதவ முன்வந்தார்கள். பாகவதரின் நண்பர் ராஜா சந்திரசேகர் படத்தை இயக்க முன்வந்தார். பானுமதி மற்றும் வி.என். ஜானகி, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிக்க முன்வந்தனர்.
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார், சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார். எழுத்தாளர் புதுமை பித்தன் திரைக்கதை எழுதினார். எம்.எல்.வசந்தகுமாரி பாடல்கள் பாடினார். இவர்கள் குறைந்த சம்பளத்தில் அல்லது சம்பளம் வாங்காமல் பணியாற்றினார்கள்.
4 வருடங்களுக்கு பிறகு வருவதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடும் பொருளாதார சிக்கலால் படம் தாமதமானது, பாகவதருக்கு அவரது குரல் வளம் போய்விட்டது, தலை மொட்டையாகி விட்டது, அவரால் நடக்க முடியவில்லை என்பது மாதிரியான வதந்திகள் பரவியது. ஒரு வழியாக படம் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தோல்வி அடைந்தது.
அதன்பிறகு மனம் வெறுத்த பாகதவர் சினிமாவை மொத்தமாக கை கழுவினர். ஒரு கட்டத்தில் அவர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதோடு நோய்வாய்பட்டார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.