ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் விடாமுயற்சி, இந்த மாதம் குட் பேட் அக்லி என இதுவரை இல்லாத அதிசயமாக ஒரே வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓரளவு வசூல் ரீதியாக வெற்றி பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் அஜித் வழக்கம் போல தனது கார் ரேஸ் பயணங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இவற்றை தவிர பெரிதாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அஜித் நேற்று திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நேற்றுமுன்தினம் தான் அஜித் ஷாலினியின் 25வது திருமண நாள் நிகழ்வு என்பதால் அந்த உற்சாகத்துடன் தனது மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க அஜித் வந்துள்ளார் என்றே தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அஜித்துடன் அமர்ந்து கிரிகெட் போட்டியை கண்டு ரசித்தார். எப்போதும் நரைத்த தலைமுடியுடனேயே வெளி இடங்களுக்கு வந்து செல்லும் அஜித் நேற்று தலைமுடிக்கு டை அடித்து இருந்தார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.