ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் இயக்குனர் பிரசாந்த் நீல். அது மட்டுமல்ல கடந்த வருடம் தெலுங்கில் பிரபாஸை வைத்து அவர் இயக்கிய சலார் திரைப்படமும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தையும் பிரசாந்த் நீல் இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சலார் படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்திலும் ஸ்ருதிஹாசன் இடம் பெறுகிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆதனால் இந்த படத்தில் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறாராம் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைத்த அந்த நட்புக்காக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அவர் சம்மதித்து உள்ளாராம். இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.