ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் நரிவேட்டை. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையரங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் சேரன். இவர்கள் இருவருடனும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வீர தீர சூரன் மூலம் தமிழில் அசத்திய சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளார். அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.
இந்த மூவருமே இந்த படத்தில் அதிரடிப்படை போலீஸாக நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் இருக்கும் பழங்குடி மக்களை அகற்ற அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றனர். அதற்கு அதிரடி படையினரை அனுப்பி அங்கு இருப்பவர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி செல்லும் படையில் இந்த மூவரும் இடம் பெறுகின்றனர். அங்கு நடைபெறும் சம்பவங்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்த மூவரும் எடுக்கும் நிலைப்பாடு இவை குறித்து இந்த படம் அமைந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் ஒரு மக்களின் உரிமைக்கான போராட்டப் படமாக இது இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தில் தமிழ் வசனங்களிலேயே பேசி நடித்திருக்கும் சேரனுக்கு மலையாள திரையுலகில் இந்த படம் ஒரு புதிய வாசலை திறந்து விடும் என்றும் உறுதியாக சொல்லலாம்.