தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, லொள்ளு சபா ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் சந்தானம்.
இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறார். இதுகுறித்து சந்தானம் கூறுகையில், ‛‛கஸ்தூரி இடத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும், சந்தானத்திற்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வதா? எனக்கென்ன அவ்ளோ வயதா ஆகிவிட்டது என்று அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதையடுத்து கதையைக் கேட்டுவிட்டு முடிவை சொல்லுங்கள் என்று இயக்குனர் அவரிடத்தில் மொத்த கதையும் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்தார். காரணம் இந்த படத்தில் அவர் நடிக்கும் அம்மா கேரக்டர்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் சந்தானம். மேலும், தற்போது சந்தானத்திற்கு 45 வயதும், கஸ்தூரிக்கு 50 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.