தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
ரீரிலீஸ் கலாசாரம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கிய படங்களை மறுபடியும் ரீரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'பாகுபலி' படத்தை அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'பாகுபலி' ரீரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா, “இந்த சிறப்பு நாளில், இந்த ஆண்டு அக்டோபரில், 'பாகுபலி' திரைப்படத்தை இந்திய மற்றும் சர்வதேச அளவில் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் மறுவெளியீடாக இருக்காது. இது எங்கள் அன்பான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும். சில புதியவற்றுடன் அற்புதமான ஆச்சரியங்களை எதிர்பார்க்கக் காத்திருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகம் 2015 ஜுலை 10ல் வெளியானது. இந்த வருட அக்டோபரில் அப்படத்தை ரீரிலீஸ் செய்யும் போது 10 ஆண்டுகள் நிறைந்திருக்கும். அதனால், அதன் 10வது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.