தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கிய கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஜுனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு 2022ம் ஆண்டே வெளியானது. ஆனால், சமீபத்தில் தான், இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜூன் 25ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் தலைப்பு ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு 'டிராகன்' என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது தற்காலிக தலைப்பு தான் என்றாலும் அதே தலைப்பில் படம் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும். ஏற்கனவே தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.